உன்னை நான் சந்திக்காமல் இருந்திருந்தால்...
சுவாசிக்காமல் உயிர் வாழும் வித்(ந்)தை மட்டும் அறிந்திருப்பேன் !
என் கைகளை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்... உணர்வுகளும் வார்த்தைகளும் நிரம்பிய என் உலகிற்கு உங்களை கூட்டிச்செல்கிறேன் ...
Thursday, January 31, 2008
என் கண்ணீர் + என் கவிதை = நீ !!!
நீ தப்பிச் செல்ல கூடாதென்று ,
மனத்தினில் மறைத்து வைத்தேன் .
என்ன பிரயோஜனம் ,
பலநேரங்களில் ..கண்ணீராய் மாறி
விழிகளின் வழியாகவெளியேறி விடுகிறாய்...
சில நேரங்களில் ... கவிதையாய் ..!
மனத்தினில் மறைத்து வைத்தேன் .
என்ன பிரயோஜனம் ,
பலநேரங்களில் ..கண்ணீராய் மாறி
விழிகளின் வழியாகவெளியேறி விடுகிறாய்...
சில நேரங்களில் ... கவிதையாய் ..!
பிரிவு
Sunday, January 27, 2008
செல்லமே...
கன்னங்கள் உரசிக்கொண்டு
கார்மேகம் கரைவதை
காண்பிக்க வேண்டும் ...
இறுக்கி அணைத்தபடி
இரவின் நிசப்தத்தை
உணர்த்த வேண்டும் ...புரியாது போனாலும்
புதியவென் கவிதைகளை
புலப்படுத்த வேண்டும்..
உணர்வுகளின் உள்ளே
உறங்கிக்கிடக்கும் இசையை
கேட்பிக்க வேண்டும்...
சுட்டு விரல் பற்றியபடி
சூரியக் கதைகள்
சொல்ல வேண்டும்...
செல்லமே ,
தேக்கிய அன்பெல்லாம்
திசையறியா ஆசைகளாய்
சிதறியிருக்கிறது ...
சிதறிக்கிடந்த நான்
கோர்க்கப் பட்டிருக்கிறேன் ,
தாய்மையால் !
Wednesday, January 23, 2008
Monday, January 14, 2008
Sunday, January 13, 2008
தொடர்தல் !
நீ
தள்ளிச் செல்லும் பொழுது
தூரம் நிரப்பி விடுகிறது ..
அருகில் வரும் பொழுது
ஆசையாய் சூழ்ந்து கொள்கிறது..
...
நம்மைத் தொடர்வது தான்
காதலின் வேலையா ?
தள்ளிச் செல்லும் பொழுது
தூரம் நிரப்பி விடுகிறது ..
அருகில் வரும் பொழுது
ஆசையாய் சூழ்ந்து கொள்கிறது..
...
நம்மைத் தொடர்வது தான்
காதலின் வேலையா ?
Saturday, January 12, 2008
சேமிப்பு
சந்தித்திராத உனக்காக
சேமிக்கத் தொடங்கிவிட்டேன் ,
.........
காதலை !
நாணயங்களை மட்டுமே பார்த்த
உண்டியல் - என்
நாணத்தால் திணறுகிறது ;)
சேமிக்கத் தொடங்கிவிட்டேன் ,
.........
காதலை !
நாணயங்களை மட்டுமே பார்த்த
உண்டியல் - என்
நாணத்தால் திணறுகிறது ;)
Friday, January 11, 2008
Pesa Nalla Time :)
"Ennanu solli Thola...?"
............
"I love u ..! "
Punnagai , sirippaga maarukirathu - Rammiyamana Isai kaadhalai nirappukirathu !
Intha matter , recent-a partha oru Tea (Brooke Bond 3 roses) Advt-la vanthuthu - kavithaigala mattume paarthu vantha en blog oru vaarthaigal illatha kavithaiyai sollatume-nu thonichu - so wanted to share this !
Rombavum malivaagi vitta vaarthai (or sentence) I-L-U .. Aaana ella manithargalum eppozhuthum ethirpaarkum varthai!! Athu ethirpaaratha tharunathil kidaikum pozhuthu - antha situation-e oru kavithai thaan!
Donno when is my turn ;)
............
"I love u ..! "
Punnagai , sirippaga maarukirathu - Rammiyamana Isai kaadhalai nirappukirathu !
Intha matter , recent-a partha oru Tea (Brooke Bond 3 roses) Advt-la vanthuthu - kavithaigala mattume paarthu vantha en blog oru vaarthaigal illatha kavithaiyai sollatume-nu thonichu - so wanted to share this !
Rombavum malivaagi vitta vaarthai (or sentence) I-L-U .. Aaana ella manithargalum eppozhuthum ethirpaarkum varthai!! Athu ethirpaaratha tharunathil kidaikum pozhuthu - antha situation-e oru kavithai thaan!
Donno when is my turn ;)
Wednesday, January 9, 2008
:-)
ஏதோ ஒன்றை உன்னிடம் கேட்கிறேன் ..
நீ புன்னகைக்கிறாய் ..
உன் புன்னகை
எனக்கான கேள்வி ஆகிறது ...
அநேகத் தருணங்களில் இது நிகழ்வதால் ,
ஒன்றை மட்டும் தெளிவுப்படுத்தி விடு ...
உன் தாய் மொழி
.............
புன்னகையா?
நீ புன்னகைக்கிறாய் ..
உன் புன்னகை
எனக்கான கேள்வி ஆகிறது ...
அநேகத் தருணங்களில் இது நிகழ்வதால் ,
ஒன்றை மட்டும் தெளிவுப்படுத்தி விடு ...
உன் தாய் மொழி
.............
புன்னகையா?
Tuesday, January 8, 2008
Saturday, January 5, 2008
இயலாமை ...
என்னை பிரிவதற்கான காரணங்களை
நீ அடுக்கிக்கொண்டே சென்றாய் ...
அப்பொழுது ,
உன்னை விரும்புவதற்கான காரணம் - எனச்
சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை ...
ஏனெனில் ,
உன்னையும் - என் விருப்பங்களையும்
என்னால் பிரித்து பார்க்க இயலவில்லை ...
requires a little bit of editing - i guess !
ppl u can help me..
நீ அடுக்கிக்கொண்டே சென்றாய் ...
அப்பொழுது ,
உன்னை விரும்புவதற்கான காரணம் - எனச்
சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை ...
ஏனெனில் ,
உன்னையும் - என் விருப்பங்களையும்
என்னால் பிரித்து பார்க்க இயலவில்லை ...
requires a little bit of editing - i guess !
ppl u can help me..
Wednesday, January 2, 2008
கருவறை வாசனை
அன்புள்ள அம்மா ,
கடவுளின் மடியில்
விளையாடிக் கொண்டிருந்தேன்.
கோவிலைக் காண்பிப்பதாகச் சொல்லி ,
என்னை ,
உன் கருவறைக்குள் பிரவேசிக்கச் செய்தார் , கடவுள் !
இருட்டாக இருந்தாலும் ,
இதமாக இருந்தது இந்தப் புதிய இடம்..
முதலில் பயமாக இருந்தாலும் ,
பிறகு சந்தோஷமாக வளரத் தொடங்கினேன் !
நீ சிரிக்கும் பொழுது ,
நானும் சிரித்தேன்..
நீ அழும் பொழுது ,
நானும் கண்ணீரில் ...
பிறகு தான் புரிந்தது
நம்மிடையே ஒரு புது உறவு மலர்ந்தது என்று ...
ஆமாம்
நீ என் அம்மா !
"அம்மாவும் நான் தான் "
- கடவுள் சொல்லி இருக்கிறார் !
இன்னொரு கடவுள் அம்மாவா - இல்லை
அம்மா இன்னொரு கடவுளா ?
தெரியவில்லை ...
இப்படி பல விஷயங்களை
யோசித்துக்கொண்டே வளர்ந்தேன் !
உன்னை பார்க்க வேண்டும் போல் இருந்தது ,
ஏனென்றால் நீ கடவுளின் சாயல் !
அப்பொழுது தான்
ஒரு தீராத வலி என்னை ஆட்கொண்டது ,
ஒரு அரக்கன் என் உடலசைவுகளைச் செயலிழக்கச் செய்தான் ...
ஓரிரு நிமிடங்களில் என் போராட்டம் தோல்வியில் முடிந்தது ।
நான் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் இழந்தேன் ॥
உன்னை பார்க்கமலே
உன்னை பிரிகிறேன்...
எனக்கு பிடித்தமான அந்தக் கோவிலை விட்டும்...
உன்னோடு விளையாட ஆசைப்பட்டேன்
என் பிறப்பே விளையாட்டாகப் போய்விட்டது
அந்த வெளிச்சத்து வாசிகளுக்கு ...
மீண்டும் அதே கடவுளின் மடியில் ..
அதே விளையாட்டுக்கள் தான் ...
புதியதாக இன்னொரு ஆசையும்..
மீண்டும்அதே இருட்டறையில் ,
உன் அன்பு மகளாக உலா வர வேண்டும் ...
மீண்டும் நுகர வேண்டும் ,
உன் கருவறை வாசனையை ...
இப்படிக்கு ,
பிறவாத உங்கள்
குட்டிப்பாப்பா :)
கடவுளின் மடியில்
விளையாடிக் கொண்டிருந்தேன்.
கோவிலைக் காண்பிப்பதாகச் சொல்லி ,
என்னை ,
உன் கருவறைக்குள் பிரவேசிக்கச் செய்தார் , கடவுள் !
இருட்டாக இருந்தாலும் ,
இதமாக இருந்தது இந்தப் புதிய இடம்..
முதலில் பயமாக இருந்தாலும் ,
பிறகு சந்தோஷமாக வளரத் தொடங்கினேன் !
நீ சிரிக்கும் பொழுது ,
நானும் சிரித்தேன்..
நீ அழும் பொழுது ,
நானும் கண்ணீரில் ...
பிறகு தான் புரிந்தது
நம்மிடையே ஒரு புது உறவு மலர்ந்தது என்று ...
ஆமாம்
நீ என் அம்மா !
"அம்மாவும் நான் தான் "
- கடவுள் சொல்லி இருக்கிறார் !
இன்னொரு கடவுள் அம்மாவா - இல்லை
அம்மா இன்னொரு கடவுளா ?
தெரியவில்லை ...
இப்படி பல விஷயங்களை
யோசித்துக்கொண்டே வளர்ந்தேன் !
உன்னை பார்க்க வேண்டும் போல் இருந்தது ,
ஏனென்றால் நீ கடவுளின் சாயல் !
அப்பொழுது தான்
ஒரு தீராத வலி என்னை ஆட்கொண்டது ,
ஒரு அரக்கன் என் உடலசைவுகளைச் செயலிழக்கச் செய்தான் ...
ஓரிரு நிமிடங்களில் என் போராட்டம் தோல்வியில் முடிந்தது ।
நான் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் இழந்தேன் ॥
உன்னை பார்க்கமலே
உன்னை பிரிகிறேன்...
எனக்கு பிடித்தமான அந்தக் கோவிலை விட்டும்...
உன்னோடு விளையாட ஆசைப்பட்டேன்
என் பிறப்பே விளையாட்டாகப் போய்விட்டது
அந்த வெளிச்சத்து வாசிகளுக்கு ...
மீண்டும் அதே கடவுளின் மடியில் ..
அதே விளையாட்டுக்கள் தான் ...
புதியதாக இன்னொரு ஆசையும்..
மீண்டும்அதே இருட்டறையில் ,
உன் அன்பு மகளாக உலா வர வேண்டும் ...
மீண்டும் நுகர வேண்டும் ,
உன் கருவறை வாசனையை ...
இப்படிக்கு ,
பிறவாத உங்கள்
குட்டிப்பாப்பா :)
முகத்தை தொலைத்த முகமூடி !
ஒரு முகம்
சிலரால் விரும்பப்படுகிறது ...
பலரும் விரும்பிடவேண்டி
ஒப்பனை செய்து கொள்கிறது ...
எல்லாரும் விரும்பிடவேண்டி
ஒவ்வொருவருக்கும் ,
ஒவ்வொரு முகமூடி அணிகிறது...
யாரும் அந்த முகத்தை
பார்க்கவில்லை - முகமூடியை
பார்க்கிறோம் என உணரவும் இல்லை !
விரும்பப்படாத முகம் ,
அழகானதாகவும் இருக்கக்கூடும் !
சிலரால் விரும்பப்படுகிறது ...
பலரும் விரும்பிடவேண்டி
ஒப்பனை செய்து கொள்கிறது ...
எல்லாரும் விரும்பிடவேண்டி
ஒவ்வொருவருக்கும் ,
ஒவ்வொரு முகமூடி அணிகிறது...
யாரும் அந்த முகத்தை
பார்க்கவில்லை - முகமூடியை
பார்க்கிறோம் என உணரவும் இல்லை !
விரும்பப்படாத முகம் ,
அழகானதாகவும் இருக்கக்கூடும் !
Subscribe to:
Posts (Atom)