Monday, December 31, 2007

என் தலையணை

முகம் புதைத்து அழும் பொழுது
கண்ணீரை கவர்ந்திருக்கிறது ,

அல்ப சந்தோஷங்களையும் கூட
ஆரவாரமில்லாமல் ரசித்திருக்கிறது ,

நியாமான கோபங்களை
அமைதியாக அங்கீகரித்திருக்கிறது ,

மொத்தத்தில் என் எல்லா உணர்வுகளையும்
அருகில் இருந்து பகிர்ந்து கொண்டிருக்கிறது ...

ஆதலால் என் தலையணை
அவனை விட மேலானது !