அங்கே எல்லாரும்
சிகப்பு பந்துகளையும்
மஞ்சள் பந்துகளையும்
வேண்டினார்கள்
அவள்
மஞ்சள் பந்தை வேண்டினாள்
நீல பந்து கிடைத்தது
இன்னொருத்தி
சிகப்பு பந்தை வேண்டினாள்
மஞ்சள் தான் கிடைத்தது
அதோ ஒருத்தி
சிகப்பு பந்துகளையும்
மஞ்சள் பந்துகளையும்
தன்னகத்தே கொண்டு
எதையோ தேடியவளாய்
நடந்து சென்றாள் ..
அவளின் மகிழ்ச்சிக்கான காரணி
இன்னொருத்தியின் சுமையாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறது
வண்ணங்களையும் வடிவங்களையும்
மீறியதாய் தோன்றும் மகிழ்ச்சி
எங்கேயோ
ஒளிந்து கொண்டு இருக்கிறது
மனங்களில் மட்டும் இருப்பதில்லை ....