Monday, September 15, 2014

அனக்கங்களற்ற நதி

நானற்று நீ நடந்த
அந்த ஏழாவது அடியில்
பிறக்கிறது
ஓர் அனக்கங்களற்ற நதி

நேற்றிரவு அனிச்சையாய்
படர்ந்தது வரை
நமதான ஸ்பரிசங்கள் யாவும்
இலைகளாய் உருக்கொண்டு
மிதக்கின்றன

ஸ்தம்பித்த மேகங்களின்
கடைசி காதற்துளி
இனி ஏற்படுத்த போவதில்லை
எந்தவொரு அதிர்வையும்
ஏதாவதொரு நீர்த்திவலையையும்

எனினும்
தீர்க்கமாய் தெரிகின்ற
என் பிரதி பிம்பத்தில்
மிக சமீபத்தில்
நீ