Saturday, April 16, 2011

!

சுயவிரக்கதின் ஜ்வாலை
என் பாதங்களில்
பற்றத் துவங்குகையில்
கசிகிறது
இறப்பின் விசும்பல்கள்

கர்வத்தின் பெருமழை
என் சிரசினின்று
பொழியத் துவங்குகையில்
பீறிடுகிறது
சிருஷ்டியின் பிரவாகம்

முரண்களின்
மொத்தமும்
என்னில்

நான்
பூரணமானவள்