நீளும் என் இரவுகள்
ஒரு கண்ணாடி ஜாடிக்குள்
சமுத்திரமென
சஞ்சரிக்கையில்
மஸ்ய ராணியாய்
சயனித்திருக்கிறேன்
ஒரு கண்ணாடி ஜாடிக்குள்
சமுத்திரமென
சஞ்சரிக்கையில்
மஸ்ய ராணியாய்
சயனித்திருக்கிறேன்
தங்கநிற மயிர்கற்றைகளை
கோதியவாறு புறப்படும்
உன் புகார்கள்
இப்பொழுதில்
என் செவி சேர்வதில்லை
கோதியவாறு புறப்படும்
உன் புகார்கள்
இப்பொழுதில்
என் செவி சேர்வதில்லை
பகிரங்கமாய்
அறிவிக்காவிடினும்
சரணடையும்
உன் புலன்களில்
பொறிக்கிறேன்
நீ அறிந்தேயிராத
என் தரப்பை
அறிவிக்காவிடினும்
சரணடையும்
உன் புலன்களில்
பொறிக்கிறேன்
நீ அறிந்தேயிராத
என் தரப்பை
ஆறாக் காயங்களின் சீழை
மாறின் இடையோடும் உப்பு நீர்
கழுவிச் செல்லுகையில்
பேரிரைச்சலோடு
இளைப்பாறத் துவங்குகிறேன்
மாறின் இடையோடும் உப்பு நீர்
கழுவிச் செல்லுகையில்
பேரிரைச்சலோடு
இளைப்பாறத் துவங்குகிறேன்
4 comments:
Nice
Thank you :)
blog is refreshing now... nalla kavithai...
Hope to have more
Thank u Ramki .. Hopefully you will see more :)
Post a Comment