Friday, March 4, 2016

மஸ்ய ராணி

நீளும் என் இரவுகள்
ஒரு கண்ணாடி ஜாடிக்குள் 
சமுத்திரமென
சஞ்சரிக்கையில்
மஸ்ய ராணியாய்
சயனித்திருக்கிறேன்
தங்கநிற மயிர்கற்றைகளை
கோதியவாறு புறப்படும்
உன் புகார்கள்
இப்பொழுதில்
என் செவி சேர்வதில்லை
பகிரங்கமாய்
அறிவிக்காவிடினும்
சரணடையும்
உன் புலன்களில்
பொறிக்கிறேன்
நீ அறிந்தேயிராத
என் தரப்பை
ஆறாக் காயங்களின் சீழை
மாறின் இடையோடும் உப்பு நீர்
கழுவிச் செல்லுகையில்
பேரிரைச்சலோடு
இளைப்பாறத் துவங்குகிறேன்

4 comments:

நந்தாகுமாரன் said...

Nice

Lakshmi Sahambari said...

Thank you :)

Ramki... said...

blog is refreshing now... nalla kavithai...
Hope to have more

Lakshmi Sahambari said...

Thank u Ramki .. Hopefully you will see more :)