நானற்று நீ நடந்த
அந்த ஏழாவது அடியில்
பிறக்கிறது
ஓர் அனக்கங்களற்ற நதி
நேற்றிரவு அனிச்சையாய்
படர்ந்தது வரை
நமதான ஸ்பரிசங்கள் யாவும்
இலைகளாய் உருக்கொண்டு
மிதக்கின்றன
ஸ்தம்பித்த மேகங்களின்
கடைசி காதற்துளி
இனி ஏற்படுத்த போவதில்லை
எந்தவொரு அதிர்வையும்
ஏதாவதொரு நீர்த்திவலையையும்
எனினும்
தீர்க்கமாய் தெரிகின்ற
என் பிரதி பிம்பத்தில்
மிக சமீபத்தில்
நீ
அந்த ஏழாவது அடியில்
பிறக்கிறது
ஓர் அனக்கங்களற்ற நதி
நேற்றிரவு அனிச்சையாய்
படர்ந்தது வரை
நமதான ஸ்பரிசங்கள் யாவும்
இலைகளாய் உருக்கொண்டு
மிதக்கின்றன
ஸ்தம்பித்த மேகங்களின்
கடைசி காதற்துளி
இனி ஏற்படுத்த போவதில்லை
எந்தவொரு அதிர்வையும்
ஏதாவதொரு நீர்த்திவலையையும்
எனினும்
தீர்க்கமாய் தெரிகின்ற
என் பிரதி பிம்பத்தில்
மிக சமீபத்தில்
நீ
3 comments:
செம நல்லா இருக்கு லஷ்மி. நிறைய எழுதுங்க. தொகுப்பு வர வாழ்த்துகள். ஏதேனும் பத்திரிக்கைக்கு அனுப்பலாமே
ரொம்பவே நாளைக்கப்பறம் ... நல்ல கவிதை...
அனக்கம் என்ற வார்த்தையின் அகராதி அர்த்தம் தெரியவில்லை...
Nakarvu - endru porul padum
Post a Comment