
சுயவிரக்கதின் ஜ்வாலை
என் பாதங்களில்
பற்றத் துவங்குகையில்
கசிகிறது
இறப்பின் விசும்பல்கள்
கர்வத்தின் பெருமழை
என் சிரசினின்று
பொழியத் துவங்குகையில்
பீறிடுகிறது
சிருஷ்டியின் பிரவாகம்
முரண்களின்
மொத்தமும்
என்னில்
நான்
பூரணமானவள்