ஒன்றுமிருப்பதில்லை
இந்தபுகைப்படத்தில் ..
அன்றைய அக்காட்சியின்
உயிர்மையில்லை
நிறத்தின் வீரியமில்லை
நாசி நிறைத்த வாசமில்லை
செவியில் ரீங்காரமிட்ட
சப்தங்களில்லை
கேமரா அறியாது
தீண்டிய உன்விரல்களும்
படபடத்த என்னெஞ்சமும்
நினைவில் வருவதுண்டு
என் கைகளை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்... உணர்வுகளும் வார்த்தைகளும் நிரம்பிய என் உலகிற்கு உங்களை கூட்டிச்செல்கிறேன் ...
Wednesday, November 4, 2009
Thursday, October 22, 2009
யாரோ சிந்திய புன்னகை
வசீகரமானதாயுள்ளது
யாரோ சிந்திய அப்புன்னகை
முகத்தின் குறைகளனைத்தையும்
கொன்று தின்று விட்டு
எவ்வித சலனமுமின்றி
மெல்ல எழும்புகிறது
என் கவனத்தையும் வார்த்தைகளையும்
பறித்த வண்ணம்
அதன் கோரைப்பற்களை
காண்பிக்கத் துவங்குகிறது
அக்கினியை உமிழ ஆயத்தமாகிறது
என்னிடமிருந்த எல்லாமும்
பொசுங்கத் துவங்குகையில்
நினைவு கூர்கிறேன்
புன்னகைக்க மறந்த
தருணங்களை
Sunday, October 11, 2009
.....
Friday, July 17, 2009
....
எழுத வேண்டும்
எழுதியே தீர வேண்டும்
.............
கதவுகள் திறக்கப்பட்டு
வெளிச்சம் வழியும் அறையில்
தரையில் அமர்ந்தபடி
உன்னுடன் அருந்திய
தேநீர் பற்றி
எதிலோ தொடங்கிய
உரையாடல்
லதா மங்கேஷ்கரில்
மையம் கொண்ட பொழுதில்
தூரத்திலிருந்து பிரயாணித்து வந்த
சாவன் கா மகீனா
பாடல் பற்றியும்
நீ ரசித்துச்சொன்ன
குழந்தை பிராயத்து
குதூகலங்களும்
கோமாளித்தனங்கள்
குறித்தும்
மழைக்காலத்து
மேகங்கள் குறித்தும்
லேசாக நனைக்கும்
சாரல் குறித்தும்
அப்பொழுது
அனிச்சையாய் கோர்த்துகொண்ட
நம் விரல்கள் குறித்தும்
முத்தமிட்டது குறித்தும்
............
எழுத வேண்டும்
எழுதியே தீர வேண்டும்
எனினும்
பின்மழை பொழுதுகளில்
கேட்டு ரசித்த புல்லாங்குழலிசை
காகிதங்களில் வசிப்பதில்லை
Monday, July 13, 2009
...
Sunday, May 24, 2009
Sunday, March 29, 2009
Friday, March 13, 2009
Thursday, March 12, 2009
பகிர விரும்புகிறேன் ...
காலச்சுவடு மற்றும் வார்த்தை ஆகிய இதழ்களில் எனது கவிதைகள் பிரசுரமாகி உள்ளது .. இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் !
http://www.kalachuvadu.com/issue-111/page45.asp
http://www.pksivakumar.blogspot.com/
http://www.kalachuvadu.com/issue-111/page45.asp
http://www.pksivakumar.blogspot.com/
Thursday, January 22, 2009
....
Saturday, January 17, 2009
...
Subscribe to:
Posts (Atom)