முகம் புதைத்து அழும் பொழுது
கண்ணீரை கவர்ந்திருக்கிறது ,
அல்ப சந்தோஷங்களையும் கூட
ஆரவாரமில்லாமல் ரசித்திருக்கிறது ,
நியாமான கோபங்களை
அமைதியாக அங்கீகரித்திருக்கிறது ,
மொத்தத்தில் என் எல்லா உணர்வுகளையும்
அருகில் இருந்து பகிர்ந்து கொண்டிருக்கிறது ...
ஆதலால் என் தலையணை
அவனை விட மேலானது !